குளுகுளுவென, பசுமையான வால்பாறையை மனதில் நினைத்துக்கொண்டு கோடை விடுமுறையில் வால்பாறை போக திட்டமிட்டுள்ளவர்கள், அங்கு கோடை வெப்பத்தால் வறட்சி நிலவுகிறது என்பதை அறிந்து கொண்டு திட்டமிடுவது நல்லது.
வால்பாறையில் கடுமையான வறட்சி நிலவுவதால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் ஏழாவது சொர்க்கம் என்று அழைக்கப்படும் வால்பாறையில் மிகவும் பிரசித்தி பெற்ற கூழாங்கல் ஆறு, நல்ல முடி பூஞ்சோலை காட்சிமுனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம்.
வெளிநாட்டினர், தமிழகம், கேரளம், புதுவை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் வந்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் ஆறுகளில் நீர் வற்றி வறட்சியாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் குறைந்துள்ளது.
Summary
Those planning to go to Valparai for summer vacation should note...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

கோடை விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

கோடை விடுமுறை: கொடிவேரில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
வீடியோக்கள்

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு



