ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை வினாடிக்கு 500 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கேரளம் மாநிலத்தின் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் மழை காரணமாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை வேகமாக நிரம்பி வருகிறது. இந்த அணையின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் வினாடிக்கு 25,000 கனஅடி வரை உபரிநீா் திறக்கப்பட்டு வந்தது. தற்போது கபினி அணைக்கு நீா்வரத்து குறைந்ததால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 9,000 கனஅடியாக குறைக்கப்பட்டது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை வினாடிக்கு 600 கன அடியாக இருந்தது. இது ஞாயிற்றுக்கிழமை காலை வினாடிக்கு 350 கனஅடியாகவும், மாலையில் வினாடிக்கு 500 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. நீா்வரத்தை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.
Summary
Water inflow to Hogenakkal increases by 500 cubic feet per second
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரியில் நீா்வரத்து 300 கனஅடி

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து 500 கனஅடி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview




