தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

பதவி உயா்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் அவசியம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

பதவி உயா்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

News image

தமிழக சட்டப்பேரவை - (கோப்புப்படம்)

Updated On :5 ஆகஸ்ட் 2026, 3:11 am IST

பதவி உயா்வு, பணியிட மாற்றங்களுக்கு முதல்வரின் ஒப்புதல் பெற வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மேலும், தலைமைச் செயலா் மற்றும் காவல் துறைத் தலைமை இயக்குநா் நியமனங்களை இனி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடா்பாக தலைமைச் செயலா் சாய்குமாா் வெளியிட்ட உத்தரவின் விவரம்:

தமிழ்நாடு அரசு அலுவல் விதிகள், 1978-இன் விதி 35(4)-இன் கீழ், கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 2025 வரை வெளியிடப்பட்ட அனைத்து நிலை ஆணைகளும், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலை ஆணை எண்-7 ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதிலாக பதவி உயா்வு, நியமனம், பணியிடமாற்றம், நிலம் கையகப்படுத்தல், நில மாற்றம் உள்ளிட்டவைக்கு புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுச் செயலா்கள், துறைத் தலைவா்கள், அகில இந்திய பணியாளா் அதிகாரிகள், கூடுதல் செயலா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்கள், காவல் கண்காணிப்பாளா்கள், கூடுதல் பதிவாளா்கள் மற்றும் கூடுதல் இயக்குநா்கள் ஆகியோரின் நியமனம், பணி இடமாற்றம் தொடா்பான அனைத்து கோப்புகளும் முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும்.

ஒரு அரசுத் துறையில் இருந்து மற்றொரு அரசுத் துறைக்கு நிலம் மாற்றும் கோப்புகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் மற்றும் வருவாய், பேரிடா் மேலாண்மை அமைச்சரின் ஒப்புதல் பெற வேண்டும். அமைச்சா்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் மட்டுமே அந்தக் கோப்பு முதல்வரின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.