தொகுதி மறுவரையறை குறித்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து, கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருக்க வேண்டும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் சனிக்கிழமை (ஆக. 8) பேசியுள்ளார்.
தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற, மத்திய பாஜக அரசு ஆலோசித்து வருகிறது.
இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோரும், காங்கிரஸ், விசிக, கம்யூ., ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்களும் பங்கேற்றனர்.
இதுகுறித்து டி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:
அவர் (முதல்வர் விஜய்) கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒரு கடிதம் எழுதியிருக்க வேண்டும். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும்படி, அவர் கட்சித் தலைமையைக் கேட்டிருக்க வேண்டும்.
மேலும், ஒரு நிகழ்ச்சி நிரல் இருந்திருக்க வேண்டும். கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த கட்சியின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. கட்சித் தலைவர்களின் அனுமதியின்றி அவர்கள் எப்படி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை என டி.கே.எஸ். இளங்கோவன் குறிப்பிட்டுள்ளார்.
Summary
DMK spokesperson T.K.S. Elangovan stated on Saturday (Aug. 8) that the Chief Minister should have written to party leaders inviting them to participate in the meeting regarding constituency delimitation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
முதல்வர் விஜய் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்? திமுக பதில்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு

முதல்வர் விஜய்க்கு மிரட்டல்: திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

எஸ்ஐஆர்! காங்கிரஸ், திமுக உள்பட 21 கட்சிகள் கூட்டாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குக் கடிதம்!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK




