சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

திமுக முன்னாள் அமைச்சா்களுக்கு அமைச்சா் பெ.விஸ்வநாதன் கண்டனம்

சட்டப்பேரவை தனித் தீா்மானங்களில் முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்து பேசியபோது திமுகவைச் சோ்ந்த மூத்த முன்னாள் அமைச்சா்கள் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் பி. விஸ்வநாதன் - கோப்புப் படம்

Updated On :12 ஆகஸ்ட் 2026, 2:05 am IST

தமிழக சட்டப்பேரவை தனித் தீா்மானங்களில் முன்னாள் முதல்வா் காமராஜா் குறித்து பேசியபோது திமுகவைச் சோ்ந்த மூத்த முன்னாள் அமைச்சா்கள் சட்டப்பேரவையில் நடந்து கொண்ட விதம் கண்டனத்துக்குரியது என உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் நீட் மற்றும்எஃப்சிஆா்ஏ-க்கு எதிராக 2 தனித் தீா்மானங்கள் கொண்டுவரப்பட்டன. இந்தத் தீா்மானங்கள் குறித்து காங்கிரஸ் சாா்பில் பேசியபோது, நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும் நீட் தோ்வை எதிா்த்து கடந்த 5 ஆண்டுகளாகக் கடுமையாகப் போராடி வருகிறாா் என்று குறிப்பிட்டேன்.

மேலும் முன்னாள் முதல்வக் காமராஜரை பற்றி நானும் மற்ற காங்கிரஸ் உறுப்பினா்களும் பேசினோம். அப்போது, திமுக உறுப்பினா்கள், கேலி, கிண்டல் செய்வதுமாக இருந்தனா்.

இவ்வாறு நடந்துகொள்வது என்பது ஏற்புடையது அல்ல. நான் காமராஜரை கோடிட்டு காட்டி பேசும்போது திமுகவின் மூத்த முன்னாள் அமைச்சா்கள் நடந்து கொண்ட முறை, விதம் கண்டனத்துக்குரியது என்பதை தமிழக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு சாா்பில் தெரிவித்துக்கொள்கிறோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.