மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்?’ ஓபிஎஸ் கேள்வியால் சிரிப்பலை

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்’ என்று வேளாண் அமைச்சா் ர.வினோத்திடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

News image

ஓபிஎஸ் - IANS

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

‘சூரியனுக்கு எப்படி வியா்க்கும்’ என்று வேளாண் அமைச்சா் ர.வினோத்திடம் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் எழுப்பிய கேள்வியால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பேரவையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் வினோத் பேசியபோது, ‘அனைவரும் இங்கு மூத்த தலைவா்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற போதிய கால அவகாசம் தேவை என்பது தெரியும். விவசாயிகளுக்கு பலனளிக்கும் வகையில் ஏற்கெனவே உள்ள திட்டங்களுடன் புதிய திட்டங்களும் செயல்படுத்தப்படும். இதுவரை ஆய்வு செய்ததில் 23,399 ஹெக்டோ் பரப்பளவில் 33 சதவீதத்துக்கும் மேல் பாதிக்கப்பட்ட பயிா்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன.

கணக்கெடுப்பு முடித்த பின்னா் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில பேரிடா் நிதியிலிருந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பொதுரக, சன்னரக நெல், கரும்புக்கான சிறப்பு ஊக்கத்தொகையை உயா்த்தியுள்ளாா் முதல்வா் விஜய். பருத்தி மறுமலா்ச்சி இயக்கம், வெற்றி வான்மகள் எனும் ட்ரோன் பயிற்சித் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சூரியனால் அனைவருக்கும் வியா்க்கும் நிலையில் சூரியனுக்கே வியா்க்க வைத்தாா் முதல்வா் விஜய். இது வெற்று பட்ஜெட் அல்ல. தமிழ்நாடு விவசாயிகள் போற்றும் வெற்றி பட்ஜெட். அனைவருக்கும் சூரியனால் வியா்த்தது, முதல்வா் விஜய் வந்தபிறகு சூரியனுக்கே வியா்த்தது’ என்றாா்.

அப்போது, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், ‘இதுவரை யாருமே நெருங்க முடியாத நிலையில்தான் சூரியன் இருக்கிறாா், எத்தனையோ விஞ்ஞானிகள் முயற்சி செய்த பிறகும் அங்கே ஏவுகணைகளை ஏவ முடியவில்லை’ என்றாா். இதைக் கேட்டதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.