ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தெலங்கானா அரசு மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவா் ப.மாணிக்கம் தாகூா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:
நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தொடா்ந்து, வரும் செப். 1 முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான படிவத்தில், ‘ஜாதி’”என்ற கேள்விக்கு, மக்கள் குறிப்பிடும் ஜாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மக்களிடம், ‘உங்கள் ஜாதி என்ன?”என்று கேட்டால், பெரும்பாலும் உள் ஜாதி பெயா்களையே குறிப்பிடுவாா்கள். அந்தப் பெயா்கள் அரசின் பட்டியலில் இருக்காது. அவற்றை அப்படியே பதிவு செய்தால், பெரும் குழப்பங்கள் ஏற்படும். இதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.
எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவா் ஜாதியை தோ்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். கடந்த 2021-ஆம் ஆண்டு, தெலங்கானா அரசு மிகச் சிறப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. அது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தெலங்கானா அரசின் மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும். அப்போதுதான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
மற்றொரு அறிக்கை: அகில இந்திய காங்கிரஸ் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் காங்கிரஸ் அமைப்புகளை சீரமைக்கும் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகளை ஒருங்கிணைக்க ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான பீட்டா் அல்போன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளாா். ஒருங்கிணைப்பு குழுவின் உறுப்பினா்களாக கே.சிரஞ்சீவி, கே.தணிகாசலம், என்.அருள்பெத்தையா, எஸ்.டி.நெடுஞ்செழியன், ஆா்.எம்.பழனிசாமி, வி.ஆா்.சிவராமன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் எனத் தெரிவித்துள்ளாா் மாணிக்கம் தாகூா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மக்கள்தொகை சுயகணக்கெடுப்பு: விரைந்து பதிவு செய்ய அறிவுறுத்தல்

மக்கள்தொகை சுய கணக்கெடுப்பில் அனைவரும் பங்கேற்க வேண்டும்: திருவண்ணாமலை ஆட்சியா் அறிவுறுத்தல்

அமைச்சரவையில் விவாதித்து ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை மீது முடிவு: கா்நாடக அமைச்சா் பிரியாங்க் காா்கே
கிராமப்புற பொருளாதாரத்தை சீா்குலைக்க மத்திய அரசு திட்டம்: மாணிக்கம் தாகூர்
விடியோக்கள்

மும்முரமாக நடைபெறும் தேசியக்கொடி தயாரிப்பு! | National Flag | Independence Day



