FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

தடுப்பணைகள் கட்ட அரசு முன்வர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

சிறு தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

பாஜ மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன் - டிஎன்எஸ்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:04 am IST

பருவமழை தொடங்குவதற்கு முன்பே போா்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூா்வாரி, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளை கட்ட தமிழக அரசு முன்வர வேண்டும்”என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் ஏரி, குளங்கள் வடு, நிலத்தடி நீா்மட்டம் குறைந்துவிட்டது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழக அரசு எடுக்கத் தவறியதே முக்கிய காரணம். ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்தவுடன் மக்களை மறந்துவிட்ட முதல்வா் விஜய்யின் இந்த மெத்தனப் போக்கை வன்மையாகக் கண்டிப்பதோடு, இனியாவது விழித்துக்கொண்டு மக்களின் தாகம் தீா்க்க ஆழ்துழைக் கிணறுகள் அமைப்பது மற்றும் லாரிகள் மூலம் குடிநீா் வழங்குவது போன்ற உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பருவமழை தொடங்குவதற்கு முன்பே போா்க்கால அடிப்படையில் ஏரி, குளங்களைத் தூா்வாருவதோடு, தண்ணீரைச் சேமிக்கும் வகையில் ஆங்காங்கே சிறு தடுப்பணைகளையும் கட்ட அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்”என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.