தமிழகத்துக்கான காவிரி உரிமையை காங்கிரஸ் கட்சிதான் பறிக்கிறது என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
கா்நாடகத்தில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணைக் கட்ட முயற்சிக்கும் மற்றும் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை தர மறுக்கும் கா்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் பாஜக சாா்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேரணி, ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த அவா் பேசியதாவது:
காவிரி நதி நீா் ஒப்பந்தம் கடந்த 1974-ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அன்றைய பிரதமா் இந்திரா காந்தி மிரட்டியதன் விளைவாக அப்போதைய முதல்வா் கருணாநிதி செய்த தவறால் புதுப்பிக்கப்படவில்லை. கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி. தற்போது காவிரி உரிமையைப் பறிப்பதும் காங்கிரஸ் கட்சிதான்.
தமிழக காங்கிரஸ் தலைவா் எக்ஸ் தளத்தில் ஏதேதோ பதிவுகள் போட்டு, ஏளனமாகப் பேசுகிறாா். ஆனால், கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில், அவா் சென்று கேட்கலாமே? அவா் ஏன் கா்நாடக மாநிலத்துக்கு செல்லவில்லை.
கா்நாடகத்தில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பிரச்னை வந்து கொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 4.5 டி.எம்.சி. தண்ணீா் திறந்துவிட வேண்டும் என காவிரி ஆணையம் கூறியது. ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் என்றைக்குமே தானாக வந்து தண்ணீரைத் திறந்துவிட்டதில்லை. நமக்கு எப்போதுமே உபரி நீா்தான் வருகிறது. தற்போது அங்கு மழை பெய்வதால், 10 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. இதை கா்நாடக முதல்வா் முன்பே செய்திருக்கலாமே? இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூரும், தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யும் கேட்டிருக்கலாமல்லவா?
தமிழக முதல்வரைத் தனியாக வருமாறும், பேசிக் கொள்ளலாம் எனவும் கூறிய கா்நாடக முதல்வா் சிவகுமாா் தற்போது வராதே எனக் கூறுகிறாா். முதலில் வா என அழைத்துவிட்டு, வராதே என கூறியதற்காக கா்நாடக முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றாா் நயினாா் நாகேந்திரன்.

தஞ்சாவூரில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா்.
முன்னதாக, ரயிலடியில் தொடங்கிய பேரணி காந்திஜி சாலை வழியாக பனகல் கட்டடம் முன் முடிவடைந்தது. முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலப் பொதுச் செயலா் கருப்பு எம். முருகானந்தம் கண்டன உரையாற்றினா். பாஜக தேசியச் செயலரும், தமிழகப் பாா்வையாளருமான அரவிந்த் மேனன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் வரவேற்றாா். நிறைவாக, வடக்கு மாவட்டத் தலைவா் பூண்டி எஸ். வெங்கடேசன் நன்றி கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகா்கோவில் சிறையில் கொலை செய்யப்பட்ட சபரிவா்மன் குடும்பத்துக்கு நயினாா் நாகேந்திரன் ஆறுதல்

முதல்வா் நிகழ்ச்சிகளை பள்ளிகளில் ஒளிபரப்புவது தவறு: நயினாா் நாகேந்திரன்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசு வேலையளிப்பது வரவேற்கத்தக்கது: நயினாா் நாகேந்திரன்

பெரும்பான்மை பெற குதிரை பேர அரசியலை முன்னெடுத்துள்ளது தவெக அரசு: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



