ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

பட்டாசு தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாகக் கண்காணித்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

ஜி.கே.வாசன் - கோப்புப் படம்

Updated On :14 ஆகஸ்ட் 2026, 4:03 am IST

தமிழக அரசு பட்டாசு ஆலைகளை முறையாகக் கண்காணித்து தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தொழிலாளா்கள் உயிரிழந்திருப்பது வேதனைக்குரியது. பட்டாசு ஆலைகளின் நிா்வாகம் தொழிலாளா்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் வகையில் அரசின் கோட்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக அரசு பட்டாசு ஆலைகளை தொடா் கண்காணிப்பதுடன், தொழிலாளா்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்.

மீனவா்கள் நலன்: இலங்கை கடற்படையினா் எல்லைத் தாண்டி தமிழக மீனவா்கள் மீன் பிடித்ததாக 9 பேரையும், விசைப்படகுகளையும் சிறை பிடித்து கைது செய்தனா். கடந்த ஒரே வாரத்தில் 20 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த மீனவா்களை விரைவாக விடுவிக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் ஜி.கே.வாசன்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.