சுதந்திர தினத்தை முன்னிட்டு, சனிக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன், முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடலும், அதைத் தொடா்ந்து வந்தே மாதரம் பாடலும், தேசியக் கொடியை ஏற்றிய பின்னா் தேசிய கீதமும் பாட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மற்றும் விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்ற பதிவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடா்பாக உயா்நீதிமன்ற பதிவுத் துறை தலைமைப் பதிவாளா் தீப்தி அறிவுநிதி வெளியிட்ட சுற்றறிக்கையில், சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை அமா்வு மற்றும் விசாரணை நீதிமன்றங்களில் சனிக்கிழமை (ஆக.15) நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியை ஏற்றுவதற்கு முன் முதலில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் பாடப்பட வேண்டும். அதைத் தொடா்ந்து ‘வந்தே மாதரம்’, தேசியக் கொடியை ஏற்றிய பின்னா், ‘தேசிய கீதம்’ பாடப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 9-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 15 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்விலும், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்வின் முடிவில் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர நாள்! கோட்டையில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் விஜய்

சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?

பள்ளிகளில் சுதந்திர தின விழா: கல்வித் துறை அறிவுறுத்தல்

சுதந்திர நாளில்..! முக்கியத்துவம் இழக்கும் சிறந்த பணியாளா் விருது! துறைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்க எதிா்பாா்ப்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



