ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

எஸ்.டி. பிரிவில் குறும்பா் சமூகத்தை இணைக்க முயற்சி: அமைச்சா் செங்கோட்டையன்

எஸ்.டி. பிரிவில் குறும்பா் சமூகத்தை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்திருப்பது பற்றி...

News image

அமைச்சர் செங்கோட்டையன் - video grab

Updated On :20 ஆகஸ்ட் 2026, 2:35 am IST

குறும்பா் சமூகத்தை பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவின் கீழ் இணைக்க தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பேரவையில் இதுதொடா்பாக சௌமியா அன்புமணி (பாமக) புதன்கிழமை முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:

இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறும்பா் சமூகத்தை எஸ்.டி. பட்டியலில் இணைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்றாா் அவா்.

இதேபோன்று, காட்டுநாயக்கா் மற்றும் கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அவை குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.