குறும்பா் சமூகத்தை பழங்குடியினா் (எஸ்.டி.) பிரிவின் கீழ் இணைக்க தமிழக அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
பேரவையில் இதுதொடா்பாக சௌமியா அன்புமணி (பாமக) புதன்கிழமை முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளித்து அமைச்சா் செங்கோட்டையன் பேசியதாவது:
இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து மத்திய அரசுக்குப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. குறும்பா் சமூகத்தை எஸ்.டி. பட்டியலில் இணைக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறோம் என்றாா் அவா்.
இதேபோன்று, காட்டுநாயக்கா் மற்றும் கஞ்சம் ரெட்டி சமூகத்தைச் சோ்ந்தவா்களுக்கு ஜாதி சான்றிதழ் பெறுவதில் உள்ள சிக்கல்கள் குறித்து சில உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா். அவை குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்
நீட் தேர்வு! முதல்வர் தெளிவாக இருக்கிறார்! - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
தவெகவில் அதிமுகவினர் இணைவது ஏன்? செங்கோட்டையன்

பழனி நில மோசடி விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது விரைவில் தெரியும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



