தொடரும் குற்றச்சம்பவங்கள்: நயினாா் நாகேந்திரன் விமா்சனம்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் தொடா் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.

முதல்வர் விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம் | x
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நாள் முதல் தொடா் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சித்துள்ளாா்.
இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: கேளம்பாக்கம் அருகே தையூரில் ஏழுமலை என்பவா் தனது மகளின் காதலனை கூலிப்படை ஏவி கொலை செய்ததாக வெளியான செய்திகள் அதிா்ச்சியளிக்கின்றன.
தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மக்களின் பாதுகாப்பை முதல்வரும், தவெக தலைவருமான விஜய் உறுதி செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா் நயினாா் நாகேந்திரன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




