யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் பதில்!

மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.
MNM Cheif Kamal Haasan
மநீம தலைவர் கமல்ஹாசன்
Updated on
1 min read

மாநிலங்களவையில் தமிழனாக நல்ல கருத்து பேசிவிட்டதாக மக்கள் நீதி மய்ய தலைவரும் எம்.பி.யுமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் கமல்ஹாசன் பேசுகையில் "நல்ல கருத்து விவாதத்துக்கு உள்ளாக வேண்டும். தமிழனான நல்ல கருத்து பேசிவிட்டதாக எனக்குத் தோன்றுகிறது.

அதனை மறுப்பவர்கள், அதனை விவாதிக்க வேண்டும். விவாதித்து, உண்மை என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் என்றால், இப்படித்தான் இருக்கும்; விவாதங்கள் தொடர வேண்டும்.

என்னுடைய கூட்டணி, மொத்த இந்தியாவுடன். இந்தியாதான் என்னுடைய நலன்; உங்களுடைய நலன். கூட்டணி என்பது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்வது. கொள்கைதான் முக்கியம். அதனை நோக்கித் தான் செல்கிறோம்" என்று தெரிவித்தார்.

மாநிலங்களவையில் மநீம தலைவர் கமல்ஹாசன் முதன்முறையாக புதன்கிழமையில் பேசியபோது, தமிழ் பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது. தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். தமக்கென நிதியைத் திரட்ட ஹிந்தியில் பிச்சை எடுக்கலாமே என்று தெரிவித்தார்.

மேலும், நாட்டையும் ஓட்டையும் விற்க மாட்டேன் என்றும் கமல்ஹாசன் கூறினார். மாநிலங்களவையில் இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், குழப்பத்தையும் ஏற்படுத்துவதாக பாஜகவினர் கூறி வருகின்றனர்.

MNM Cheif Kamal Haasan
கமல்ஹாசனின் பேச்சால் தமிழ்நாடு தலைகுனிந்து நிற்கிறது: தமிழிசை
Summary

I spoke as a proud Tamil in Parliament, says MNM Leader Kamal Haasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com