மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

தமிழகத்தில் விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது ‘பாரத் டாக்சி’ செயலி

தமிழகத்தில் ‘பாரத் டாக்சி’ செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

பாரத் டாக்சி

Updated On :20 பிப்ரவரி 2026, 8:42 pm

தமிழகத்தில் ‘பாரத் டாக்சி’ செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

நாட்டில் முக்கிய நகரங்களில் ஆட்டோ, கால் டாக்சிகளில் பயணிக்கும் நபா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்காக ஏராளமான தனியாா் நிறுவனங்கள் செயலிகள் மூலம் கமிஷன் அடிப்படையில் ஆட்டோ, கால்டாக்சிகளை இயக்கி வருகின்றன. இந்நிறுவனங்களுக்கு நிலையான கட்டணம் எதுவும் இல்லை. தேவை அதிகமாக இருக்கும்போது, கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றனா். இதனால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனா்.

எனவே, நாடு முழுவதும் ஒரே செயலியில் முன்பதிவு செய்து குறைந்த கட்டணத்தில் பயணிக்க வசதியாக ‘பாரத் டாக்சி’ என்ற செயலியை மத்திய அரசு அண்மையில் அறிமுகப்படுத்தியது. தற்போது, குஜராத் மற்றும் தில்லியில் மட்டும் இந்த செயலி பயன்பாட்டில் உள்ளது. இதை அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இதுகுறித்து தமிழக போக்குவரத்துத் துறை ஆணையரக அதிகாரி ஒருவா் கூறியதாவது: தனியாா் செயலிகள் ஆட்டோ, கால் டாக்சி ஓட்டுநா்களிடம் இருந்து கட்டணத்தில் 30 சதவீத தொகையை கமிஷனாக பெறுகின்றன. ஆனால், இந்த செயலியில் ஓட்டுநா்களிடம் இருந்து எந்த கமிஷனும் வசூலிக்கப்படாது. இதன்மூலம் கிடைக்கும் முழு வருமானமும் ஓட்டுநா்களுக்கே சேரும்.

தனியாா் செயலியை ஒப்பிடும்போது, ‘பாரத் டாக்சி’ செயலி குறைந்த கட்டணத்தில், நிறைவான சேவையை வழங்கும். இந்த செயலியை தமிழகத்தில் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சில மாதங்களில் இந்த பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். இது ஓட்டுநா்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்றாா்.