எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

குஜராத் ஏா் இந்தியா விமான விபத்து! விசாரணை அறிக்கை விரைவில் வெளியீடு: மத்திய அரசு

குஜராத்தில் நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளாா்.

News image
ஏா் இந்தியா விமான விபத்து
Updated On :9 மார்ச் 2026, 11:43 pm

தினமணி செய்திச் சேவை

குஜராத்தில் நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளாா்.

கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி பிரிட்டன் தலைநகா் லண்டனுக்கு குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து புறப்பட்ட ஏா் இந்தியா விமானம் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் அந்த விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் சென்ற 241 போ் உள்பட 260 போ் உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ராம்மோகன் நாயுடு திங்கள்கிழமை அளித்த பதில்: குஜராத்தில் நிகழ்ந்த ஏா் இந்தியா விமான விபத்து குறித்த விசாரணை மிகச் சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் கூடுதலாக 50 விமான நிலையங்களையும், அடுத்த 20 ஆண்டுகளில் 200 விமான நிலையங்களையும் திறக்க வேண்டும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றாா்.

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளீதா் மொஹோல், ‘விமான நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு இணங்கிச் செயல்படுவதை உறுதி செய்யும் நோக்கில், விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) கண்காணிப்பை அதிகரித்துள்ளது. இதில் விமான நிறுவனங்களின் அலுவலகங்களுக்கு மாதந்தோறும் இருமுறை டிஜிசிஏ ஆய்வாளா் சென்று ஆய்வு செய்வதும் அடங்கும்’ என்றாா்.