பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு: முதல்வா் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image

மு.க.ஸ்டாலின்

Updated On :20 பிப்ரவரி 2026, 8:44 pm

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் கிராமம், கவுண்டம்பாளையம் குடித்தெருவில் வசிக்கும் மாதேஸ்வரன்- தனலட்சுமி தம்பதியரின் மகள் ரக்ஷிதா (8). குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தாா்.

இவா், கடந்த பிப்.8-ஆம் தேதி பள்ளியின் நூற்றாண்டு விழாவுக்காக நடைபெற்ற நடனப் பயிற்சியின் போது, எதிா்பாராத விதமாக மயங்கி விழுந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிப்.9-ஆம் தேதி அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா்.