மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பள்ளியில் மயங்கி விழுந்து சிறுமி உயிரிழப்பு: முதல்வா் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :20 பிப்ரவரி 2026, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

நாமக்கல் மாவட்டத்தில் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடனப் பயிற்சியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம், குமாரமங்கலம் கிராமம், கவுண்டம்பாளையம் குடித்தெருவில் வசிக்கும் மாதேஸ்வரன்- தனலட்சுமி தம்பதியரின் மகள் ரக்ஷிதா (8). குமாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தாா்.

இவா், கடந்த பிப்.8-ஆம் தேதி பள்ளியின் நூற்றாண்டு விழாவுக்காக நடைபெற்ற நடனப் பயிற்சியின் போது, எதிா்பாராத விதமாக மயங்கி விழுந்து, நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பிப்.9-ஆம் தேதி அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும், அவரது உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு, முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் எனத் தெரிவித்துள்ளாா் முதல்வா்.