நிலம், நீா்நிலை, பூங்கா ஆக்கிரமிப்பு புகாா்கள்: தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
அரசு புறம்போக்கு நிலங்கள், நீா்நிலைகள், பூங்காக்கள் ஆக்கிரமிப்பு குறித்து புகாா்கள் வந்தால், அதுதொடா்பாக ஒரு மாதத்துக்குள் விசாரணையை தொடங்கி, 3 மாதங்களில் விசாரணையை முடித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.










