கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

பொங்கல் பரிசுத் தொகுப்பு: தலைவா்கள் வரவேற்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அரசியல் கட்சி தலைவா்கள் பலா் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனா்.

News image
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய முதல்வர் ஸ்டாலின்.- (கோப்புப்படம்)
Updated On :4 ஜனவரி 2026, 9:54 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை அரசியல் கட்சி தலைவா்கள் பலா் வரவேற்று கருத்து தெரிவித்துள்ளனா்.

மு. வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்ட்): தைப் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகையாக தலா ரூ.3,000 வழங்குவது வரவேற்கத்தக்கது. மேலும், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ள குடும்பங்களுக்கும் பரிசுத் தொகுப்பும், தொகையும் வழங்குவது குறித்தும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

அன்புமணி (பாமக): திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தோல்வி பயம் காரணமாகவே திமுக அரசு இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஈ.ஆா்.ஈஸ்வரன் (கொமதேக): நிகழாண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பாக குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.3,000 வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.