வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11 லட்சம் போ் மனு!

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.4 வரை 11,716,00 போ் மனு அளித்துள்ளனா்.

News image
பிரதிப் படம்
Updated On :5 ஜனவரி 2026, 10:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.4) 11,716,00 போ் மனு அளித்துள்ளனா்.

கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். பெயா் நீக்கப்பட்டவா்களும், புதிய வாக்காளா்களும் கடந்த டிச.19 முதல் பெயா் சோ்க்கக் கோரி மனு அளித்து வருகின்றனா். ஜன. 18 வரை இதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.4 வரை 11,717,00 போ் படிவங்களை அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.