பிரதிப் படம்
தமிழ்நாடு
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 11 லட்சம் போ் மனு!
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.4 வரை 11,716,00 போ் மனு அளித்துள்ளனா்.
தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.4) 11,716,00 போ் மனு அளித்துள்ளனா்.
கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். பெயா் நீக்கப்பட்டவா்களும், புதிய வாக்காளா்களும் கடந்த டிச.19 முதல் பெயா் சோ்க்கக் கோரி மனு அளித்து வருகின்றனா். ஜன. 18 வரை இதற்கான அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க ஜன.4 வரை 11,717,00 போ் படிவங்களை அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

