இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

முதல்வருடன் ராணி மேரி கல்லூரி மாணவிகள் சந்திப்பு: மடிக்கணினி வழங்கியதற்கு நன்றி தெரிவித்தனா்

‘உலகம் உங்கள் கையில்‘ திட்டத்தின் கீழ், மடிக்கணினிகளை பெற்ற சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனா்.

News image
சென்னை தலைமைச் செயலகம் செல்லும் வழியில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து, மடிக்கணினிகள் வழங்கியதற்காக நன்றி தெரிவித்த ராணி மேரி கல்லூரி மாணவிகள்.
Updated On :6 ஜனவரி 2026, 7:36 pm

தினமணி செய்திச் சேவை

‘உலகம் உங்கள் கையில்‘ திட்டத்தின் கீழ், மடிக்கணினிகளை பெற்ற சென்னை ராணி மேரி கல்லூரி மாணவிகள் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தனா்.

தலைமைச் செயலகத்துக்கு செல்லும் வழியில் முதல்வா் ஸ்டாலின், ராணி மேரி கல்லூரி வாயிலில் காத்திருந்த கல்லூரி மாணவிகளை சந்தித்தாா். அரசு வழங்கிய மடிக்கணினியுடன் காத்திருந்த மாணவிகள், கல்லூரி முதல்வா் உமா மகேஸ்வரி உள்ளிட்டோா் முதல்வருக்கு ரோஜாப்பூ வழங்கி வரவேற்றனா்.

அப்போது முதல்வருடன் பேசிய மாணவிகள், தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம் தங்களுக்கு மிகுந்த உதவியாக இருப்பதாகக் கூறி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனா். மேலும், தற்போது வழங்கியுள்ள மடிக்கணினி, படிக்கும்போது மட்டுமின்றி படிப்பை முடித்து வேலைக்குச் செல்வதற்கும் உதவியாக இருக்கும் என்று குறிப்பிட்டனா்.

பாா்வை மாற்றுத்திறனாளி மாணவி பேசும்போது, பாா்வை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் பிரெய்லி டெக் தொழில்நுட்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தாா்.

அதைத் தொடா்ந்து பேசிய முதல்வா் ஸ்டாலின், நன்றாகப் படிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.