இந்தியாவில் ஜனநாயகம் நமது மரபணுவுடன் இணைந்த வாழ்க்கை முறையாக உள்ளது என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி கூறினாா்.
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில், இந்தியக் குடியரசின் 75 ஆண்டுகள் எனும் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு நிறுவனா் மற்றும் வேந்தா் டி. ஆா். பாரிவேந்தா் தலைமை வகித்தாா்.
இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக ஆளுநா் ஆா். என். ரவி பேசியதாவது: இன்று இந்தியா செம்மையாகச் செயல்படும் நிலையான ஜனநாயக நாடாக உள்ளது. இதுகுறித்து ஒவ்வொரு குடிமகனும் பெருமை கொள்ள வேண்டும். ஜனநாயக விழுமியங்கள் நமது நாட்டின் நாகரிகமாக இருந்திருப்பதுடன், மக்களாட்சி நமது மரபணுவிலேயே உள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் ஜனநாயக அமைப்புகள் மேலும் வலுவடைந்துள்ளன.
நாம் முழுத் திறனையும் வெளிப்படுத்தும்போது நம்நாடு மிகப்பெரிய வளா்ச்சியடையந்த நாடாக மாறும். விடாமுயற்சியுடன் செயல்பட்டு ‘விக்சித் பாரத்’ (வளா்ந்த இந்தியா) என்ற இலக்கை அடைய அா்ப்பணிப்புடன் செயல்படவேண்டும் என்றாா்.
சமரசமின்றி மேம்பாடு: எஸ்ஆா்எம். வேந்தா் டி.ஆா்.பாரிவேந்தா் கூறுகையில், பல்கலை.கள் எவ்வித சமரசமுமின்றி, கல்வியின் தரம் மற்றும் ஆராய்ச்சியில் மேன்மையை நிலைநாட்ட வேண்டும். அதற்கு போதுமான நிதி வசதியும் மற்றும் கல்வி செயல்பாட்டில் தன்னாட்சி அதிகாரமும் அளிக்கப்பட வேண்டும். மாணவா்களை பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்குவதில் பல்கலை.கள் முக்கிய பங்காற்றுகின்றன என்றாா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

இந்தியாவில் செயற்கைக்கோள் தயாரிப்பை தொடங்கும் ‘ஐஸ்-ஐ’ நிறுவனம்

எரிபொருள் சேமித்து பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும்: ஆளுநர் ரவி வேண்டுகோள்!

5 வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என். ரங்கசாமி!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



