
கோடியக்கரையில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!
கோடியக்கரையில் கடல் சீற்றம் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

மீனவர்கள் கடலுக்குச் செல்லாததால் கோடியக்கரை மீன்பிடி துறைமுக பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்.
வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் இன்று(ஜன. 9) வழக்கத்தைவிட வேகமான தரைக்காற்று வீசிவரும் நிலையில், கோடியக்கரை கடல் பரப்பு சீற்றமாக காணப்படுவதால் அப்பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

சீற்றமாகக் காணப்படும் கோடியக்கரை கடல்.
இதன் காரணமாக, தமிழக கடலோரம் மற்றும் காவிரி படுகை பகுதியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக மாறலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை லேசான மழை பெய்த நிலையில், தற்போது, வழக்கத்தைவிட சற்று வேகமான தரைக்காற்று வீசிவருகிறது.
கோடியக்கரை பகுதி கடல் பரப்பு சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
Summary
Due to rough seas in Kodiyakarai, fishermen did not go out to sea.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







