

இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை இந்திய கடலோரக் காவற்படை கைது செய்தது.
அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவற்படை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு அருகே இந்திய கடல் எல்லைக்குள் பாகிஸ்தானின் மீன்பிடிக் கப்பலான அல்-மதீனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவற்படையிடம் இருந்து பாகிஸ்தான் மீனவர்கள் தப்ப முயன்றபோதிலும், அவர்களை இந்திய கடலோரக் காவற்படை இடைமறித்தது.
மேலும், படகில் இருந்த 9 பேரையும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக படகையும் போர்பந்தருக்கு கொண்டுசெல்லப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.