தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிவிநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்புதொழில்நுட்பம், கனிம வளத்தை ஆயுதமாக்கக் கூடாது: பிரதமர் மோடி எச்சரிக்கை!243 பயணிகளுடன் இந்தோனேசிய கப்பல் மாயம்: 103 பேர் மீட்பு!தனித்துப் போட்டி, தவெக ஆட்சிக்கு பாதிப்பில்லை: பெ. சண்முகம்தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம் போட்டி: மு. வீரபாண்டியன் அறிவிப்பு

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம்: வர்த்தகச் செயலாளர்

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா நெருக்கமாக உள்ளது: வர்த்தகச் செயலாளர்

Published On :

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா நெருக்கமாக உள்ளதாக வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால் பேசுகையில், "பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. நிலுவையில் உள்ள பிரச்னைகளை பேச்சுவார்த்தைக் குழுக்கள் பேசி வருகின்றன. இருப்பினும், அதற்கான காலக்கெடுவை நிர்ணயிக்க முடியாது.

ஆனால், பேச்சுவார்த்தை நெருக்கமாகத்தான் உள்ளது. இரு தரப்பினரும் தயாராகும்வரை பேச்சுவார்த்தை இருக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், இந்தியா - அமெரிக்கா வர்த்தகம் குறித்தும் பேசிய ராஜேஷ் அகர்வால், "அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி, இன்னும் ஒரு நேர்மறையான போக்கைத்தான் தக்கவைத்துள்ளது. அதிக வரி இருந்தபோதிலும், சுமார் 7 பில்லியன் டாலர் வர்த்தகம் இருந்து வருகிறது. அதே சமயத்தில் குறைவான வரி உள்ள பகுதிகளிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

கடுமையான வரியால், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி குறையும் என்ற அச்சம் இருந்தது. அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில், எரிசக்தி வர்த்தகம் ஒரு சிக்கலான பிரச்னையாக இருந்து வருகிறது" என்று கூறினார்.

Summary

India And US Very Close To Signing Trade Deal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.