வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

தமிழகத்தில் என்றைக்குமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி திட்டவட்டம்

News image
செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி- பிடிஐ
Updated On :11 ஜனவரி 2026, 8:41 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் என்றைக்குமே கூட்டணி ஆட்சி இல்லை என்று அமைச்சர் ஐ. பெரியசாமி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

திண்டுக்கலில் செய்தியாளர்களுடன் அமைச்சர் ஐ. பெரியசாமி பேசுகையில், "கேட்பது அவர்களின் உரிமை. ஆனால் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என்று நாங்கள் பரிசீலிக்கவில்லை. எப்போதுமே இங்கு கூட்டணி ஆட்சி கிடையாது.

இங்கு எப்போதுமே தனிக் கட்சியின் ஆட்சிதான். அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. கூட்டணி ஆட்சியெல்லாம் இருக்காது. கூட்டணி ஆட்சியில்லை என்பதில் முதல்வரும் உறுதியாக உள்ளார்" என்று தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்குள் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இருப்பினும், ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பது திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், தமிழகத்தில் தனிக் கட்சி ஆட்சிதான் என்று முதல்வர் கூறியதாக அமைச்சர் ஐ. பெரியசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.