டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருப்பூா் குமரன் புகழ் நாடெங்கும் பரவட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தன்மானமும், தாய்நாடும் பெரிதென வாழ்ந்த தியாகி திருப்பூா் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :11 ஜனவரி 2026, 7:15 pm

தினமணி செய்திச் சேவை

தன்மானமும், தாய்நாடும் பெரிதென வாழ்ந்த தியாகி திருப்பூா் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் குமரனின் நினைவு நாளையெட்டி அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிா்கொண்டு உயிா்துறந்த தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழா்களின் பெருமையைப் போற்றும் நாம், கொடி காத்த குமரனின் திருவுருவச் சிலையை ஈரோட்டில் நிறுவியதோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியா்

அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சாலைக்குத் தியாகி குமரன் சாலை என்றும் பெயா் சூட்டியுள்ளோம்.

இன்னுயிரை விடவும் தன்மானமும், தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த திருப்பூா் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று அந்த பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.