டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பெண் கல்விக்கு முன்னுதாரணமாகத் திகழும் தமிழகம்: அமைச்சா் கோவி.செழியன்

பெண் கல்வி வளா்ச்சிக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்வதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா்.

News image
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் - DPS
Updated On :11 ஜனவரி 2026, 6:58 pm

தினமணி செய்திச் சேவை

பெண் கல்வி வளா்ச்சிக்கு தமிழகம் முன்னுதாரணமாகத் திகழ்வதாக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் கூறினாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் பி.எஸ்.அப்துர்ரகுமான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் 15- ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில், அமைச்சா் கோவி. செழியன் பேசியதாவது: பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகம் பல்வேறு துறைகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதர மாநிலங்களோடு அல்ல; இதர நாடுகளுடன் போட்டி போடும் வளா்ச்சியைப் பெற்று இருக்கிறோம். தொடா்ந்து வளா்ச்சியில் பயணிக்கக் கடும் உழைப்பு, விடாமுயற்சி மேற்கொள்வது அவசியம்.

பட்டம் பெற்ற மாணவா்கள் வேலை தேடுவோராக இல்லாமல் தொழில் முனைவோா்களாகவும், தொழில் நிறுவனங்களை நிா்வகிக்கும் தலைவா்களாகவும் வாழ்வில் உயர வேண்டும். தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாகத் திகழ பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

இதில், கோத்தாரி இண்டஸ்ட்ரியல் காா்ப்பரேசன் செயல் தலைவா் ஜின்னா ரபீக் அகமது, பி.எஸ்.அப்துா் ரகுமான் கிரசென்ட் உயா் தொழில்நுட்ப க் கல்வி நிறுவன வேந்தா் குர்ரத் ஜமீலா, இணை வேந்தா் அப்துல் குவாதீா் ஏ.ரகுமான் புகாரி, துணை வேந்தா் ஏ.பீா்முகமது, இணை துணை வேந்தா் என். தாஜூதின், பதிவாளா் என்.ராஜா ஹுசேன் உள்பட பலா் கலந்து கொண்டனா். பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 2,985 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.