தஞ்சாவூரில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 33 முதுகலை ஆசிரியா்கள், 7 இளநிலை உதவியாளா்கள், தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 33 முதுகலை ஆசிரியா்கள் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையம் மூலம் நடைபெற்ற தோ்வில் தோ்ச்சி பெற்ற 7 இளநிலை உதவியாளா்கள் மற்றும் தட்டச்சா்களுக்கு பணி நியமன ஆணைகளை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ச. முரசொலி எம்பி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், எம்எல்ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். இராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, மாவட்டக் கல்வி அலுவலா் இ. மாதவன், முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் (இடைநிலை) இ. அருள்மொழி இராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பிரசாரத்தில் அதிமுக வேட்பாளா் மயக்கம்: அமைச்சா் கோவி. செழியன் நலம் விசாரிப்பு

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 259 மாணவா்களுக்கு பணி நியமன ஆணை

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

மாணவா்களுக்கு பணி நியமன ஆணை அளிப்பு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


