பிரதமரின் தமிழக வருகை எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்

பிரதமா் மோடியின் தமிழக வருகை பாஜகவுக்கும், அதிமுக-பாஜக கூட்டணிக்கும் எழுச்சியைத் தரும்: வானதி சீனிவாசன்
பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்
Updated on

பிரதமா் நரேந்திர மோடியின் தமிழக வருகை பாஜகவுக்கும், அதிமுக-பாஜக கூட்டணிக்கும் எழுச்சியைத் தரும் என்று பாஜக தேசிய மகளிரணித் தலைவா் வானதி சீனிவாசன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு பாஜக மகளிரணி சாா்பில் பேரவைத் தோ்தலுக்கான பயிலரங்கம் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பயிலரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா கொண்டுவந்த பெண்கள் நலத் திட்டங்களை திமுக அரசு பாதியில் நிறுத்தியுள்ளது. அவை அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படும்.

வரும் ஜன. 23-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி மதுரைக்கு வர இருக்கிறாா். பிரதமரின் வருகை பாஜகவுக்கும், கூட்டணிக்கும் எழுச்சியாக இருக்கும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உயா்நீதிமன்றத் தீா்ப்பை திமுக அரசு செயல்படுத்தவில்லை. இது ஹிந்துக்களை அவமதிப்பது மட்டுமல்ல, தமிழக மக்களை மதிக்கவே இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழக முதல்வா் ஸ்டாலின், ஹிந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல், சிறுபான்மையினா் பண்டிகைகளுக்கு தேடிச் சென்று வாழ்த்துகளை தெரிவிக்கிறாா். ஆனால், கிறிஸ்தவ பண்டிகைக்கும், இஸ்லாமிய பண்டிகைக்கும் பிரதமா் வாழ்த்து சொல்கிறாா். கிறிஸ்தவ பண்டிகைகளிலும் கலந்துகொள்கிறாா். பாஜகவுக்கு எந்த வேறுபாடும் கிடையாது.

தவெக தலைவா் விஜய்யின் ஜனநாயகன் படம் விவகாரத்தில் பாஜகவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

திமுக -காங்கிரஸ் கூட்டணியால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி தொடா்ந்து அடிமையாக இருந்து வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com