பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

ஜன நாயகனுக்கு ஆதரவாக ராகுல் காந்தியின் கருத்து பற்றி...

News image

விஜய், ராகுல் காந்தி

Updated On :14 ஜனவரி 2026, 3:03 am IST

நமது நிருபர்

புதுதில்லி, ஜன. 13: "விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை மத்திய அரசு தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்' என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், ராகுல் காந்தியும் இப்போது விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

வழக்கு நாளை விசாரணை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்த மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், படத்தில் மதரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன; பாதுகாப்புப் படை சின்னங்களும் இடம்பெற்றுள்ளன என்று கூறி மறு ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தது.

அதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்குமாறு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு கடந்த 9-ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு அன்றைய தினமே இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (ஜன. 15) விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வில் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

Summary

An attack on Tamil culture! Rahul on jana nayagan issue

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.