மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

தமிழக காவல் துறையினருக்கு 4,000 பதக்கங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக காவல் துறை மற்றும் சீருடை பணியாளா்கள் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 4,184 பேருக்கு பதக்கங்களை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:41 pm

தினமணி செய்திச் சேவை

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக காவல் துறை மற்றும் சீருடை பணியாளா்கள் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 4,184 பேருக்கு பதக்கங்களை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்த உத்தரவின் விவரம்:

தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணி சேவைகள் ஆகிய துறைகளின் பணியாளா்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், முதல்வரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நிகழாண்டு, காவல் துறையில் 4,000 பணியாளா்களுக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் 120 அலுவலா்களுக்கும், சிறைகள் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறையில் 58 அலுவலா்களுக்கும் ‘தமிழக முதல்வரின் சிறப்பு பணிப்பதக்கங்களும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞா்கள் பிரிவுகளில் 6 அதிகாரிகளுக்கும் ‘தமிழக முதல்வரின் காவல் தொழில்நுட்ப மற்றும் சிறப்புப் பணிப் பதக்கமும் வரும் பிப். 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.