

பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் மது விற்பனை ரூ. 900 கோடியை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி, தமிழகத்தில் ஜன. 14, 15 ஆகிய தேதிகளில் மட்டும் ரூ. 518 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 4 நாள் கொண்டாட்டத்தின் முடிவில் ஒட்டுமொத்தமாக ரூ. 900 கோடியை எட்டும் என்று புள்ளிவிவரங்களின்படி கணிக்கப்பட்டுள்ளது.
இருநாள்களில் சென்னையில் ரூ. 98.75 கோடியும், மதுரையில் ரூ. 95.87 கோடியும். திருச்சியில் ரூ. 85.13 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது.
கடந்தாண்டு பொங்கல் திருநாளின்போது, 4 நாள்களில் ரூ. 725 கோடியாக இருந்த நிலையில், இந்தாண்டு இரு நாள்களிலேயே ரூ. 518 கோடியை எட்டியது.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 11.9 சதவிகிதம் வளர்ச்சியடைந்த நிலையில், அதனைவிட மது விற்பனை (14.10%) அதிகரித்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.