

ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் மரபுப்படி ஆளுநர் ஆர்.என். ரவியின் உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழக சட்டப்பேரவைக்கு இன்று காலை வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவி, முதலில் தமிழ்த் தாய் பாடல் இசைக்கப்பட்ட நிலையில், அடுத்ததாக தேசிய கீதம் இசைக்கப்படும் என்று சிறிது நேரம் ஆளுநர் காத்திருந்த நிலையில், உரையைத் தொடங்குமாறு பேரவைத் தலைவர் அப்பாவு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து உரையைப் படிக்க மறுத்த ஆளுநர், பேரவையைவிட்டு வெளியேறினார்.
இதனையடுத்து, ஆளுநர் உரையை படிக்காமல் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில், ஆளுநர் உரையை படித்ததாக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, சட்டப்பேரவை விதி 17ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
ஏற்கெனவே உள்ள நடைமுறைகளை பின்பற்றி தமிழக அரசு தயாரித்த ஆளுநர் உரையை பேரவையில் படிக்காமல் சென்றததை இப்பேரவை ஏற்கவில்லை. கணினியில் பதிவேற்றம் செய்துள்ள ஆளுநர் உரையின் ஆங்கில மொழியாக்கம் ஆளுநர் படிக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது.
பேரவைத் தலைவர் அப்பாவு படிக்கவுள்ள ஆளுநர் உரையின் தமிழாக்கம் மற்றும் முன்மொழியும் தீர்மானம் பேரவை நடவடிக்கை குறித்து இடம் பெறலாம் என்ற தீர்மானத்தை நான் மொழிகிறேன்
நீண்டகால பாரம்பரியம் கொண்ட மக்கள் சபையின் மாட்சிமையை அவமதிக்கும் செயலாக இருக்கும் என்றே கருதுகிறேன். அரசு எடுக்கும் முடிவுக்கு ஆளுநர் ஒத்துழைக்க வேண்டும், வரலாற்று சிறப்புமிக்க பேரவையின் மாண்பை ஆளுநர் காக்க வேண்டும்
பேரவையின் ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை நீக்க அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியா முழுவதும் இந்த நடவடிக்கை அமலுக்கு வர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.