சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

மறைந்த எம்எல்ஏக்களுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு!

மறைந்த எம்எல்ஏக்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு...

News image
Updated On :21 ஜனவரி 2026, 6:31 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவையின் 2 ஆம் கூட்டத்தொடரில் இன்று மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று(ஜன. 20) தொடங்கியது. ஆண்டின் முதல் நாள் பேரவையில் ஆளுநர் உரையாற்றி தொடக்கிவைப்பது வழக்கம்.

அதன்படி பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, பேரவையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படாததால் அவையில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் 2 ஆம் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏக்கள் சா. பன்னீர்செல்வம், எல். கணேசன், பொன்னுச்சாமி ஆகியோருக்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஏ.வி.எம். சரவணன், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான அருணாச்சலம் வெள்ளையன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரது மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.

இதன்பின்னர் அவை நாளை(ஜன. 22) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.