கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

எடப்பாடி பழனிசாமி வீட்டில் பியூஷ் கோயல்! காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு!!

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு பியூஷ் கோயல் வருகை தந்துள்ளார், காரசார விருந்துடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

News image

பியூஷ் கோயல் | எடப்பாடி பழனிசாமி - file photo

Updated On :22 ஜனவரி 2026, 9:44 am IST

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் சென்னை பசுமைவழி இல்லத்துக்கு, தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று காலை வருகை தந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று காலை அவருக்கு விருந்தளிக்கப்படுகிறது. காரசாரமாக காலை விருந்துடன் அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையும் நடத்தப்படுகிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமா் மோடி தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வருகை தரவிருக்கும் நிலையில், அதற்குள் தோ்தல் கூட்டணியை இறுதி செய்து கூட்டணித் தலைவா்களை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க தமிழக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அதன் அடிப்படையிலேயே நேற்று அமமுக இணைப்பு நடந்தது, இன்று எடப்பாடி பழனிசாமியுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கிட்டத்தட்ட இறுதிசெய்யப்பட்டிருக்கும் நிலையில், இன்று தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது. இந்த விருந்தில், நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானசி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்களும், அதிமுக சார்பில் எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

தமிழக பேரவைத் தோ்தல் ஒரு சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியை விரிவுபடுத்தும் பணியை அதிமுகவும், பாஜகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

அதன் ஒருப்படியாக, டி.டி.வி.தினகரனை தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் கொண்டுவந்தால் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் திமுகவுக்கு சவாலாக அமையும் என பாஜக, அதிமுகவில் இரண்டாம் கட்டத் தலைவா்கள் தங்களது கட்சித் தலைமையிடம் தொடா்ந்து மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வந்தனா்.

இந்த நிலையில்தான், சென்னையில் புதன்கிழமை தமிழக பாஜக தோ்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் மற்றும் அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் சந்திப்பின்போது கூட்டணி உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் அன்புமணியின் பாமக, அமமுக இணைந்துள்ள நிலையில், இன்று அதிமுக - பாஜக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

Summary

Piyush Goyal has visited Edappadi Palaniswami's house, and talks on seat sharing are underway with a lavish dinner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.