தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவைக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
தாம்பரம் - திருவனந்தபுரம் இடையேயான வாராந்திர அம்ரித் பாரத் விரைவு ரயில் சேவை வரும் ஜனவரி 28ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வாரந்தோறும் புதன்கிழமை தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.
அதேநாளில் காலை 10.40 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது. இந்த ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. முன்னதாக திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் பிரதமர் மோடி 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளை கொடியசைத்து தொடக்கிவைத்தார்.
அதன்படி, நாகர்கோவில் - மங்களூரு, திருவனந்தபுரம்-தாம்பரம், திருவனந்தபுரம் - சர்லப்பள்ளி இடையே இயக்கப்படும் 3 அம்ரித் பாரத் ரயில் சேவைகளையும், திருச்சூர் - குருவாயூர் இடையே இயக்கப்படும் புதிய பயணிகள் ரயில் சேவையையும் அவர் தொடக்கிவைத்தார்.
Summary
Bookings for the Tambaram - Thiruvananthapuram Amrit Bharat Express train service will begin at 8 am tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குமரி - திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியை விரைந்து முடிக்கக் கோரி எம்.பி. மனு

பொதிகை விரைவு ரயிலை முதல் நடைமேடையில் நிறுத்தக் கோரிக்கை

கோடை விடுமுறை: சிறப்பு ரயில்கள் இயக்கம்

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




