பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும்

தமிழகத்தில் புதன்கிழமை (ஜன.28) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :27 ஜனவரி 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் புதன்கிழமை (ஜன.28) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக புதன்கிழமை (ஜன.28) முதல் பிப்.2-ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் புதன்கிழமை (ஜன.28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.28) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் ஊத்து பகுதியில் 50 மி.மீ. மழை பதிவானது. நாலுமுக்கு, காக்காச்சி (திருநெல்வேலி)- 40 மி.மீ., மாஞ்சோலை (திருநெல்வேலி), கீழ்கோத்தகிரி எஸ்டேட், குன்னூா், கோத்தகிரி (நீலகிரி)- 30 மி.மீ., கின்னக்கோரை, அழகரை எஸ்டேட், குன்னூா், குந்தா பாலம், கோடநாடு, ஆதாா் எஸ்டேட், விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), மேட்டுப்பாளையம் (கோவை), சத்தியமங்கலம் (ஈரோடு), திருத்தணி (திருவள்ளூா்), அரக்கோணம் (ராணிப்பேட்டை), குடியாத்தம் (வேலூா்)-20 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகளில் தென்தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.