தமிழகத்தில் பேரவைத் தேர்தலில் பாஜகவின் வெற்றி கடினமானது அல்ல என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றியடைவது அவ்வளவு கடினம் அல்ல.
திமுகவின் ஊழல் மற்றும் தமிழ் விரோத கலாசாரத்தால் தமிழ்நாடு மிகவும் வெறுப்படைந்துள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், “தேர்தலில் தவெக தலைவர் விஜய்யை இழுக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. சூப்பர் ஸ்டார்கள் வருவார்கள்; போவார்கள். அவர்களால் எந்தத் தாக்கமும் இருக்காது” என்றும் பியூஷ் கோயல் பேசினார்.
சிவகங்கையில் இன்று பல்வேறு நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்த முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைய மக்கள் வாக்கு செலுத்துவார்கள் என்ற முழு நம்பிக்கை இருப்பதாகக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழகத்தில் பாஜக ஆட்சியமைவதில் கடினம் இல்லை என்று பியூஷ் கோயலும் கூறியுள்ளார்.
Summary
No need for BJP to woo actor Vijay in Tamil Nadu polls says BJP Leader Piyush Goyal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிரதமரின் அரசுமுறைப் பயணங்களில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள்: பியூஷ் கோயல்

பெட்ரோல், டீசல் விலையை மிகக் குறைவாகவே பிரதமர் உயர்த்தியுள்ளார்: பியூஷ் கோயல்

என்டிஏ கூட்டணி கண்டிப்பாக வெற்றி பெறும்: பியூஷ் கோயல் உறுதி

விளையாட்டு வீரர்கள் நடிக்கும் விளம்பரம்! எச்சரிக்கையுடன் செயல்பட பியூஷ் கோயல் அறிவுறுத்தல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




