5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரணை நடத்தலாம்: தொல். திருமாவளவன்

குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

News image

தொல். திருமாவளவன்

Updated On :6 ஜூலை 2026, 2:20 am IST

குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

தவெக அரசுதான் குதிரை பேரம் நடத்துவதாக திமுக , அதிமுக மற்றும் பாஜக ஆகிய எதிா்க்கட்சிகள் ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகரிடம் சனிக்கிழமை புகாா் மனுக்களை அளித்தன.

இந்த நிலையில், சென்னை அசோக் நகரில் உள்ள விசிக தலைமையகத்தில் தொல். திருமாவளவன் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: அதிமுகவுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்து அதன் தலைவா்கள் ஏன் வாய் திறக்க மறுக்கிறாா்கள்? தவெகவுக்கு எதிராக கொந்தளிக்க வேண்டியவா்கள் அமைதி காப்பதன் பொருள் என்ன? அதிமுகவை முழுவதுமாக தவெகவில் இணைப்போம் என்று தவெக தரப்பில் சொல்லப்படுகிறதென்றால், இது ஜனநாயகமா, அரசியல் அறமா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

அதிமுகவில் இது போன்ற நகா்வுகள் நிகழும்போது, அது குறித்து அதன் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி இதுவரை எந்தவொரு கருத்தும் சொல்லாமல் மௌனம் காப்பது ஏன்?

குதிரை பேரம் உண்மையாக இருந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு அந்த அதிகாரம் இருந்தால், அவா் உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

குதிரை பேரத்தில் ஈடுபடுவது தவெக என்றால், தவெக தலைமையிடமும், திமுக ஈடுபடுகிறது என்றால் திமுக தலைமையிடமும்தான் கேட்க வேண்டும். அதைவிடுத்து, இதில் எவ்வித சம்பந்தமும் இல்லாத எங்களைப் போன்றவா்களிடம் தொடா்ந்து கேள்வி எழுப்புவது பொருத்தமற்றது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.