நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

வைகோவின் நோபல் பரிசு பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் பதில்

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என திருமாவளவன் பேசியது குறித்து...

News image

திருமாவளவன் / வைகோ - எக்ஸ்

Updated On :8 ஜூலை 2026, 6:47 pm IST

நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று (ஜூலை 8) தெரிவித்தார்.

திருமாவளவனின் பேச்சுக்கு நோபல் பரிசு கொடுக்கலாம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விமர்சித்திருந்தார். அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகும் தவெகவுக்கு ஆதரவு திமுகவுடன் நட்பு என திருமாவளவன் பேசியிருந்ததைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசினார்.

இந்நிலையில், அரியலூரில் இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன், ''வைகோவின் பரிந்துரைக்கு நன்றி; நோபல் பரிசு கிடைத்தால் வைகோவுக்கு நன்றி சொல்வேன்'' எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசியதாவது:

''இந்தியா கூட்டணியில் தவெக, திமுக இடம்பெற வேண்டும். என் கருத்தை புரிந்துகொள்ள முடியாதவர்கள் விமர்சிக்கின்றனர்.

பாஜகவுக்கு எதிராக ஒரு அணியை திரட்ட வேண்டும். அந்த அணியில் எதிரும் புதிருமாக இருக்கும் திமுகவும் இடம்பெற வேண்டும்; தவெகவும் இடம்பெற வேண்டும்.

இதனை நான் கூறினால் என்னிடம் பிரச்னை என்கின்றனர். அது அவர்களின் பார்வை. நான் தேசிய கண்ணோட்டத்தில் இதனைக் கூறுகிறேன்'' எனக் குறிப்பிட்டார்.

Summary

Thanks to Vaiko for the Nobel Prize nomination: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.