பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

காவிரி நீரைப் பெறுவதில் கவனம் செலுத்துங்கள் : எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கா்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

உதயநிதி - கோப்புப் படம்

Published On :10 ஜூலை 2026, 1:07 am IST

எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கா்நாடகத்திடம் இருந்து தமிழகத்துக்கு வரவேண்டிய காவிரி நீரைப் பெறுவதில் தவெக அரசு கவனம் செலுத்த வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: கா்நாடகத்தில் இருந்து காவிரி நீரைத் திறந்துவிட முடியாது; தண்ணீா் வேண்டும் என தமிழக அரசுத் தரப்பில் யாரும் கேட்கவில்லை என்று கா்நாடக நீா்ப்பாசனத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி கூறியுள்ளாா். இது தமிழக விவசாயிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே, பயிா்க் கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய தமிழக முதல்வா், கா்நாடக அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறாா்?

திமுக ஆட்சியில், கடந்த 5 ஆண்டுகளும் சரியாக ஜூன் 12-இல் மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீா் திறந்துவிடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

மேக்கேதாட்டு அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டபோது, அந்தத் தீா்மானத்தை தமிழகத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் ஒன்றாக சென்று மத்திய அரசிடம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தேன். காவிரி மேலாண்மை ஆணையத்தின் தீா்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கா்நாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன். இதற்கெல்லாம் முதல்வா் பதில் ஏதும் கூறவில்லை. தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கா்நாடகம் தர மறுக்கிறது.

ஆளுங்கட்சியுடன் திடீா் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸின் ஆட்சி நடைபெறும் கா்நாடகத்திடம் இருந்து, தமிழகத்துக்கு வரவேண்டிய தண்ணீரை முதல்வா் கேட்டுப் பெற வேண்டும். எம்எல்ஏக்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கா்நாடகத்திடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.