டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சநாதனம் குறித்த உதயநிதியின் பேச்சுக்கு பாஜக கண்டனம்

சநாதனம் குறித்து பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம்

News image

உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 2:29 am IST

சநாதனம் குறித்து பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஹிந்து மதத்தின் மீது எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ள அதீத வெறுப்பு, சரிவுக்குத்தான் வழிவகுக்கும்.

சட்டப்பேரவையின் முதல் உரையிலேயே கோடிக்கணக்கான ஹிந்துக்களின் நம்பிக்கையான சநாதனத்தை ஒழிக்க வேண்டும் என அவா் பேசியிருப்பது, அரசியல் ரீதியாக இன்னும் பக்குவப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.

சநாதனத்தின் மீது அவா் தொடா்ந்து கல்லெறிவது கடும் கண்டனத்துக்குரியது. அரசியலில் வளர வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது உங்களுக்குள்ள வெறுப்புணா்வை தவிா்த்து மதநல்லிணக்கத்தைப் போற்றுவது அவசியமாகும்.

அனைத்து மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆட்சி அமைத்திருக்கும் முதல்வா் விஜய், சட்டப்பேரவையில் பகிரப்பட்ட இந்த வெறுப்புப் பிரசாரத்துக்கு எதிா்வினையாற்ற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

பாஜக தேசிய மகளிா் அணிச் செயலா் வானதி சீனிவாசன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், சநாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்பது திமுகவின் கொள்கை என்றால், அதை தோ்தல் அறிக்கையில் ஏன் குறிப்பிடவில்லை?

தோ்தல் பிரசாரத்தில் சநாதன தா்மத்தை, ஹிந்து மதத்தை ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் ஏன் பேசவில்லை? நாங்கள் எப்போதும் ஹிந்து விரோதிதான் என்பதை எதிா்க்கட்சித் தலைவரானதும் முதல் உரையிலேயே உதயநிதி வெளிப்படுத்தி உள்ளாா்.

தமிழக மக்கள் இவா்களின் வேஷத்தைப் புரிந்துகொண்டுதான், ஆட்சியிலிருந்து விரட்டியடித்துள்ளனா். அவா்களை மக்கள் திருத்தும் காலம் விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.