FOLLOW US

ON GOOGLE DISCOVER

முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

மருத்துவமனைகளில் நிலவும் குறைகளைக் களைய 50 நோடல் அதிகாரிகள் நியமனம்!

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள சீர்கேடுகளைக் களைவதற்காக 50 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவது குறித்து...

News image

மருத்துவமனை - பிரதிப் படம்

Updated On :10 ஜூலை 2026, 8:22 pm IST

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள சீர்கேடுகளைக் களைவதற்காக 50 நோடல் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனைகளில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாகக் கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் 31 மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவர் - செவிலியர் பற்றாக்குறை, நோயாளிகள் பராமரிப்பு, தூய்மைப் பணி, குடிநீர், கழிப்பறை, திருட்டு, நாய்கள் தொல்லை, ஊழல், முறைகேடு உள்ளிட்ட 304 குறைபாடுகள் இருப்பதாக அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, வெளியிடப்பட்ட இந்த அறிக்கை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சீர்கேடுகளைக் களையவும் அனைத்து மருத்துவமனை நிறுவனங்களிலும் 50 நோடல் அதிகாரிகள் நியமிக்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

50 Nodal Officers Appointed to Address Shortcomings in Hospitals

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.