FOLLOW US

ON GOOGLE DISCOVER

அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 10)

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக...

News image

கோப்புப் படம் - IANS

Updated On :10 ஜூலை 2026, 9:57 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10, வெள்ளிக்கிழமை) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் நேற்று முதல் உயர்ந்து வருகிறது.

இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,120 -ம், செவ்வாய் அன்று சவரனுக்கு ரூ. 1,280 -ம் குறைந்தது. புதன்கிழமை காலை சவரனுக்கு ரூ. 560 குறைந்திருந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 640 குறைந்தது.

நேற்று (வியாழன்) காலை சவரனுக்கு ரூ. 240 குறைந்த நிலையில் மாலை ரூ. 800 உயர்ந்தது.

இந்த நிலையில், ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 10, வெள்ளி) சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,06,800-க்கும் கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,350-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ. 245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 2.45 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Summary

chennai gold and silver price today july 10

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.