ரூ.850 கோடியில் தோல் இல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் விஜய் அடிக்கல் நாட்டினார்.
கரூர் மாவட்டத்தில் அடிடாஸ் நிறுவனத்திற்காக, தோல் அல்லாத காலணிகள் இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலை அமைப்பதற்காக ரூ.850 கோடி முதலீட்டில் 6,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில் எவர்வான் கோத்தாரி ஃபுட்வேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தோல் இல்லாத காலணி தொழிற்சாலைக்கு முதல்வர் ஜோசப் விஜய் காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
கரூர் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற அடிடாஸ் நிறுவனத்திற்கான தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி செய்திடும் வகையில், ரூ. 850 கோடியில், 6,750 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கும் வகையில், இரண்டாம் கட்ட உற்பத்தி ஆலையை அமைக்க உள்ளது.
இதன்மூலம், உலகளாவிய காலணி உற்பத்தித் துறையில், தமிழ்நாட்டின் நிலை மேலும் வலுப்படுவது மட்டுமின்றி, இம்மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி, ஏற்றுமதி மற்றும் பெருமளவிலான வேலைவாய்ப்புகளை, குறிப்பாக மகளிருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைந்திடும்.
இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா, பால்வளத் துறை அமைச்சர் சி. விஜயலட்சுமி, தலைமைச் செயலர் மு. சாய்குமார், கூடுதல் தலைமைச் செயலர் விஜயகுமார், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அலுவலர் தீபக் ஜேக்கப், கரூர் ஆட்சியர் முத்துக்குமரன், பீனிக்ஸ் கோத்தாரி ஃபுட்வேர் நிறுவனத்தின் தலைவர் ரஃபிக் அகமது, எவர்வான் குழுமத் தலைவர் சாங் ரோங்-வு, எவர்வான் குழுமத்தின் தலைமைச் செயல் அலுவலர் சாங் யி-சுன், வெளிநாட்டுப் பிரதிநிதி லின் ஹுவாய்-தே, அடிடாஸ் நிறுவனத்தின் மூத்த நிர்வாகக் குழு பிரதிநிதி சுதான்ஷு சர்மா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Summary
Chief Minister Vijay laid the foundation stone for a non-leather footwear factory worth Rs 850 crore.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

18 பேர் உயிரிழந்த கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு முழுமையாக சீல்!

18 போ் உயிரிழந்த தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைக்கு சீல்!

தடையற்ற மின் விநியோகத்துக்கு ரூ.15,032 கோடியில் திட்டம்: முதல்வா் விஜய் உத்தரவு





