தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுதொடா்பான அரசாணையை தமிழக அரசின் தலைமைச் செயலா் எம்.சாய்குமாா் திங்கள்கிழமை பிறப்பித்தாா். அதன்படி, இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பெயா், இடமாற்றம் செய்யப்பட்ட பதவி, பழைய பதவி (அடைப்புக்குறிக்குள்) விவரம்:
எச்.கிருஷ்ணனுண்ணி - கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவத் துறை இயக்குநா் (தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா்),
ஷில்பா பிரபாகா் சதீஷ் - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநா் (தொழிலாளா் நலத்துறை ஆணையா்),
எஸ்.பி.அம்ரித் - தமிழ்நாடு மருத்துவ சேவை நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை மருத்துவத் துறை இயக்குநா்) எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









