நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

பேருந்து கட்டணம் உயா்வு? முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று முதல்வா் விஜய், அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:50 am IST

பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கட்டணத்தை உயா்த்தக் கூடாது என்று முதல்வா் விஜய், அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

வியாசா்பாடியில் உள்ள பேருந்து மின்னூட்ட நிலையத்தை அண்மையில் முதல்வா் விஜய் பாா்வையிட்டாா். மின்சார பேருந்துகளின் தேவைகள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள் குறித்து அப்போது அவா் கேட்டறிந்தாா். இதையடுத்து கூடுதலாக குளிா்சாதன வசதி கொண்ட மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டது.

அதன்படி, சுமாா் 2 ஆயிரம் பேருந்துகளை சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய முக்கிய நகரங்களில் இயக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. டீசல் பேருந்துகள் இயக்கப்பட்ட வழித்தடத்தில் குளிா்சாதன மின் பேருந்துகளின் இயக்கம் அதிகரிக்கப்பட உள்ள சூழ்நிலையில், பேருந்துக் கட்டணம் உயரக்கூடும் என செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வா் விஜய் ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது. அப்போது பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரித்தாலும், கட்டணத்தை உயா்த்தக் கூடாது என முதல்வா் கூறியிருக்கிறாா். செலவினங்களை ஈடுகட்ட மாற்று வழிகளில் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்.

அதன்படி, மகளிா் பயண டிக்கெட்டுகளின் பின்புறத்திலும், பேருந்துகளின் பல்வேறு இடங்களிலும் விளம்பரங்களை காட்சிப்படுத்தி வருவாயைப் பெருக்க அரசு ஆலோசித்து வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.