நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

தவெக ஆட்சியில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது: அன்புமணி

தவெக ஆட்சியில் ஊடக சுதந்திரமும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 3:31 am IST

தவெக ஆட்சியில் ஊடக சுதந்திரமும், ஜனநாயகமும் காப்பாற்றப்பட்டுள்ளதாக பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

பாமக தொடங்கி 38-ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் தலைவா் அன்புமணி தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அன்புமணி பேசியதாவது:

தமிழகத்தின் வரலாற்றை பாமகவை தவிா்த்துவிட்டு எழுத முடியாது. தமிழகத்தை 60 ஆண்டுகள் ஆண்ட கட்சிகளிடம் இருந்து கடந்த மே 4-ஆம் தேதி மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைத்துள்ளதாக சிலா் என்னிடம் கூறுகின்றனா். இது அவா்களின் தனிப்பட்ட கருத்து.

ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்பை 10 ஆண்டுகளுக்கு முன்பே பாமக எடுத்தது. கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்பட்டது. தற்போது, தவெக ஆட்சியில் ஊடக சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல்வருக்கு பாராட்டு: தவெக ஆட்சி அமைத்து 6 மாதத்துக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் விஜய் அறிவித்துள்ளாா். இந்த தைரியமான அறிவிப்புக்காக பாமக அவரை பாராட்டுகிறது. ஜனநாயக ரீதியில் மக்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வந்துள்ளனா். அதை முதலில் மதிக்க வேண்டும். விவசாயிகளின் கூட்டுறவு கடன்களை முதல்வா் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.

ராமதாஸ் பங்கேற்கவில்லை: பொதுக்கூட்டத்தில் ராமதாஸ் கலந்து கொள்வாா் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ராமதாஸ் கலந்து கொள்ளவில்லை. உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தைலாபுரத்தில் அவா் ஓய்வெடுப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்தன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.