நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் வெளிநாட்டு சதி என நடிகரும் பாஜக பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார் தெரிவித்தார்.
நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் போராட்டம் நடத்தி வந்த சிஜேபி இளைஞர்கள், ஜூலை 20 அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர்.
பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற இந்தப் பேரணியில், தில்லி காவல் துறையினர் நடத்திய தடியடி மற்றும் பெல்லட் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்தனர்.
இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும் சென்னை, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் இதுபற்றி நடிகரும் பாஜக பொதுக்குழு உறுப்பினருமான சரத்குமார், செய்தியாளர்களுடன் பேசுகையில்,
"ஆரம்பத்தில் இருந்தே சொல்லிக்கொண்டு இருக்கிறோம். நீட் தேர்வு அவசியம்தான். காவல்துறையில் சேர வேண்டும் என்றால் தகுதி இருக்கிறதா என்று தெரிந்துகொள்ள அவர்கள் பயிற்சி முகாமுக்குச் செல்கிறார்கள். நீட் தேர்வு இல்லை என்றால் நேரடியாக வந்து கல்லூரிகளில் சேர்வார்கள். இந்த போராட்டம் என்னவென்று எனக்குப் புரியவில்லை.
காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது 13 முறை வினாத்தாள் கசிவு நடந்தது. தற்போது நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டவர்கள்,
நீட் தேர்வுக்கான போட்டி அதிகரித்துள்ளது. லட்சக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை.
இந்த போராட்டம் வெளிநாட்டு சதி. இதில் இளைஞர்கள் சிக்கிக்கொள்ளக் கூடாது. எதற்காக இந்த போராட்டம் என இளைஞர்கள் உணர்ந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து இருக்கும்போது அதை சீர்குலைக்கும் வகையில் நடக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. அதிகமான இளைஞர்கள் உள்ள நாடு இந்தியா. அவர்களை சரியாக வழிநடத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது" என்று பேசினார்.
Summary
Protest against NEET is a foreign conspiracy: Sarathkumar
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீட் தேர்வு: வலுக்கும் எதிர்ப்பு! தமிழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!!

மாணவர்கள் தாக்கப்படும் விடியோக்களை முதல்வர் பார்க்கவில்லையா? - பா. ரஞ்சித் கேள்வி!
நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்த் திரையுலகினர் போராட்டம்! வெற்றிமாறன், பா. ரஞ்சித் உள்ளிட்டோர் பங்கேற்பு!

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு! திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது!
விடியோக்கள்

Ravindran duraisamy interview | ராமதாஸ் எடுத்த முடிவு சரியா? | Dr Ramadoss | PMK | Anbumani
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



